புதிய தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை ஊக்கவிப்பதுடன் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் என, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தனியார் பள்ளி விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்காகவே மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஜப்பான் போன்ற நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
















