திருச்சியில் நடைபெற்ற வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள Red fox ஹோட்டலில், முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது மற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கிருஷ்ணசாமியின் மகன் ராஜ்மோகன் மற்றும் குடும்பத்தினர் உமா பிரித்விராஜ், லீலாவதி, கல்பனா, ஸ்ரீநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஸ்ரீமதி, தங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வழக்கறிஞர் கிருஷ்ணசாமி இருந்ததாகவும், சிறுவயது முதல் அவரை பார்த்தே தான் வளர்ந்ததாகவும் தெரிவித்தார்.
















