இலங்கையிலிருந்து நீலகிரி திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கோத்தகிரியில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
இதில் இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செந்தில் தொண்டமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் தொண்டைமான், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார்.
















