ஆம்பூர் அருகே நடைபெற்ற அரசு விழாவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண் ஒருவர், மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவச வீடு கேட்டு எம்.எல்.ஏ-விடம் அழுது புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம்பூர் திமுக எம்.எல்.ஏ வில்வநாதனை குறுக்கிட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெண் ஒருவர், வீடு, மகளிர் உரிமைத் தொகை போன்ற அரசின் திட்டங்கள் எதுவுமே தனக்கு கிடைக்கவில்லை என்றும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கண்ணீர் மல்க புலம்பினார்.
















