திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளது.
கனரக வாகனங்களுக்கு FC புதுப்பிக்கும் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ள இக்காலகட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் என்பது விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகளே தற்போதுவரை தேங்கியிருப்பதால், தற்போது அறுவடை செய்துள்ள நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
















