நெல்லை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுவதாக வெளியான புகார் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியான நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
தென்காசியை சேர்ந்த ரத்தினராஜ் என்பவர் அவரது மனைவியை நெல்லை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்,
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் ரத்தின ராஜிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை டீனிடம் புகாரளித்த அவர் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்தார்.
இதுதொடர்பான செய்தி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிலையில் இதன் எதிரொலியாக நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது,
மேலும் புகாரளிக்கப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனையறிந்த பலரும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
















