நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை தொகைக்காக முதல்வருக்கு திமுக கவுன்சிலர் சசிகுமார் நன்றி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கவுன்சிலர் சம்பூர்ணம், உரிமைத்தொகை மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்பட்டதாகவும், பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படவில்லை எனவும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றார்.
இதனால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஒருவருக்கு ஒருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
















