தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்க சட்டசபைகளின் பதவிக் காலம், மே மாதத்தில் முடிவடைகின்றன. இதனால் 5 மாநிலங்களிலும் பேரவை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 2வது வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், மேற்குவங்கம் மற்றும் அசாமில் பல கட்டமாகவும் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
















