புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே முதியவரின் கடையை போலீசார் எட்டி உதைத்து சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமயம் அருகே நெய்வாசலில் போலீசாரின் அனுமதியின்றி மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு வந்த போலீசார், போட்டியை தடுத்து நிறுத்தினர்.
இதனால் மஞ்சுவிரட்டு போட்டிக்காக வந்திருந்த காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், மஞ்சுவிரட்டு நடைபெறுவதால் அந்த பகுதியில் முதியவர் ஒருவர், தண்ணீர் பாட்டில், பழங்கள், கூல் போன்றவற்ற வைத்து தற்காலிக கடை அமைத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த போலீசார், கடையில் இருந்த பொருட்களை காலால் உதைத்து அப்புறப்படுத்தினர். ஏழை முதியவரின் கடையை போலீசார் சூறையாடிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















