தருமபுரி பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிராம் நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே வட்டாட்சியர் குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அரூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் நள்ளிரவு உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 14 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 104 கிராம் தங்க நாணயங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,
இதேபோல, நலம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கவியரசு என்பவர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை தருமபுரி கோட்டாட்சியரிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் மட்டும் வாகன தணிக்கையின்போது 9 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
















