நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது.
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84 ரன்களும், சுப்மன் கில் 64 ரன்களும், ஜோஸ் பட்லர் 57 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 230 ரன்கள் இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
குஜராத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த வீரர்களும் அவுட் ஆன நிலையில் 13.4 ஓவர்களில் வெறும் 140 ரன்களுக்கு சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது..
இதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் அணி, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம் தனது கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
















