திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மட்டுமே நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் பின்புறம், இந்து சமய அறநிலையத்துக்கு உட்பட்ட பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 55 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அம்பத்தூர் எம்எல்ஏ பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரமேஷ், திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்தார்.
















