உலககோப்பை கால்பந்து ‘ரவுண்டு-32’ போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பிரேசில் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த உலககோப்பை கால்பந்து தொடருக்கான ‘ரவுண்டு-32’ போட்டியில் பிரேசில் அணி, ஜப்பான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பிரேசில் வீரர் நெய்மர் களமிறங்கவில்லை. ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு கைஷு சானோ ஒரு கோல் அடித்தார். பின்னர் பிரேசில் அணியினர் நீண்ட நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தபோதும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர். முதல் பாதி முடிவில் ஜப்பான் அணி 1க்கு 0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 56ஆவது நிமிடத்தில் பிரேசிலின் கேஸ்மிரோ ஒரு கோல் அடித்தார்.
பின்னர் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் காயமடைந்த கேஸ்மிரோ வெளியேறினார். அதன்பின் பிரேசிலின் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ‘ரவுண்டு-16’ போட்டிக்கு முன்னேறியது. ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஐவரி கோஸ்ட் அல்லது நார்வே அணியை பிரேசில் எதிர்கொள்ளும்.
















