திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய அரசு மன்னிப்பு கேட்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், அதேபோன்ற நிலைமை இந்த அரசுக்கும் ஏற்படும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றத்தில் நிச்சயமாக நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் இந்த அரசாங்கம் மரண அடி வாங்கிக் கொண்டு தான் வரும் என்றும், முந்தைய அரசு மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல் தான் இந்த அரசுக்கும் ஏற்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இங்குள்ள இஸ்லாமியர்கள் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அரசாங்கம் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
















