சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக 6,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் வெல்ல முடியவில்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக எம்எல்ஏக்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டாலும் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய விடாமல் தடுத்தது யார்? என்றும், பணம் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் நிலையில் தவெக இல்லை என்றும் அவர் கூறினார்.
வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பாகவே திமுக அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு முடிவு எடுத்தனர் என்றும் அது என்ன பேரம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
















