சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேக்கரை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் , உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரே திகழ்வார் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி, அதே நிலைப்பாட்டை தவெக அரசும் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதுதவிர தமிழக பட்ஜெட், தவெக அரசு மீதான அதிமுகவின் குதிரை பேர குற்றச்சாட்டு தொடர்பாக ஆளுநரிடம் சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
















