தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11 ஆயிரத்து 526 கோடி ரூபாய் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் நிதி முடங்கிக் கிடப்பது அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, நிதித்துறையின் கீழ் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த ஆய்வில், 2021 முதல் 2025 வரை பல்வேறு துறைகளில் 11 ஆயிரத்து 526 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தத் தொகை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் நிதி முடக்கம் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















