ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தமிழகத்தில் சுமார் 50 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளின் தரம் குறித்த பொதுமக்களின் கவலை காரணமாக, அங்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவது நீண்ட காலமாக வெளிப்படையான ரகசியமாக இருந்து வருவதாகவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவித்து, ஆசிரியர் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசு பள்ளி ஆசிரியர் நியமன நடைமுறையில் உள்ள குறைபாடுகளை முதலில் களைய வேண்டும் என்றும், அதன்பிறகே உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
















