கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணை செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த சூழலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசுப்பணிக்கான ஆணைகளை வழங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், அரசுப் பணி ஆணைகள் செல்லாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
சுயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி தொழில்முனைவோராக மாற்றக் கூடாதா என்றும்,
கருணை அடிப்படையில் பணி பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்படுமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது.
மேலும், நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் மரணத்தை கரூர் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர்.
















