கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் - சிறப்பு தொகுப்பு!
Aug 3, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 2, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் திடீரென திரண்டு ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றதால் வரலாறு காணாத எல்லை குழப்பமும், பதற்றமும் உருவாகியுள்ளது. சட்டவிரோத ஊடுருவல்கள் திடீரென அதிகரித்ததற்கு என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய யூனியனின் ஒரே தரை எல்லையாக விளங்கும் ஸ்பெயினின் (Ceuta) சியூட்டா மற்றும் மெலில்லா வழியாக குடியேறும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பல நாட்களாக அதிகரித்து வருகிறது.

(Ceuta) சியூட்டா மற்றும் மெலில்லா ஆகியவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் பிரதான நிலப்பகுதியில் அமைந்துள்ள ஒரே ஐரோப்பியப் பிரதேசங்கள் ஆகும்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்தாலும், அரசியல் ரீதியாக ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய யூனியனின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக உள்ளன.

மொராக்கோ நாட்டின் தரை எல்லையையும், மத்திய தரைக்கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் அமைந்துள்ள இந்தப் பகுதிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மொராக்கோ அரசு நீண்ட ஆண்டுகளாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் ஸ்பெயின், மொராக்கோவின் அரசியல் மற்றும் சட்டப்பூர்வமான கோரிக்கையை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.

ஐரோப்பா கண்டத்துக்குள் நுழையும் ஒரே நுழைவு வாயிலாக அமைந்துள்ள இந்தப் பகுதிகள் வறுமை மற்றும் உள்நாட்டு மோதல்களில் இருந்து தப்பிக்க விரும்பும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் முக்கிய மையமாகத் திகழ்கிறது.

கடந்த வியாழக்கிழமை மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடலில் நீந்தி ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்றதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

எல்லைப் பாதுகாப்பையும் கடற்படைப் பாதுகாப்பையும் மீறி நூற்றுக்கணக்கானோர் கடலில் நீந்தியும், தடுப்புச் சுவர்களைக் கடந்தும் நகருக்குள் நுழைந்து வருவதால் அங்கு “முழு அவசரநிலை” பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மொராக்கோவின் எல்லை நகரமான எஃப்னிடெக்கில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தராஜல் (Tarajal) கடற்கரைப் பகுதி வழியாகச் Ceuta சியூட்டா எல்லைக்குள் நுழைந்து வருகின்றனர்.

எல்லையைக் குறிக்கும் படகுத்துறையைச் சுற்றி நீந்துவதற்காக, கான்கிரீட் கரைகள் வழியாகக் கடலுக்குள் ஆயிரக்கணக்கானோர் சறுக்கி இறங்கும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

ஸ்பெயின் கடற்கரைகள் ரப்பர் வளையங்களாலும், துடுப்புகளாலும் நிரம்பி வழிகின்றன. சில புலம்பெயர்ந்தோர் தங்கள் வருகையைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், பத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

சரியாக எத்தனை பேர் எல்லையைக் கடந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் சுமார் 2,000 முதல் 3,000 பேர் வரை Ceuta சியூட்டாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் தான் 2021ம் ஆண்டு மே மாதத்தில் ​ஒரு சில நாட்களுக்குள் சுமார் 8,000 பேர் Ceuta சியூட்டாவுக்குள் நுழைந்தனர்.

குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கானோர் நகருக்குள் குவிந்ததால் நகரில் உள்ள அகதிகள் முகாம்கள் மற்றும் தற்காலிகத் தங்குமிடங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. அடிப்படை வசதிகளைக் கூட வழங்க முடியாமல் உள்ளூர் நிர்வாகம் திணறி வருகிறது.

மொராக்கோ பாதுகாப்புப் படையினரும், ஸ்பெயின் கடலோரக் காவல் படையினரும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அலை அலையாக வரும் அகதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதால், நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளதாக அப்பகுதியின் தலைவர் ஹுவான் இயேசுஸ் விவாஸ் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பையும் கடற்படைப் பாதுகாப்பையும் மீறி நூற்றுக்கணக்கானோர் கடலில் நீந்தியும், தடுப்புச் சுவர்களைக் கடந்தும் நகருக்குள் நுழைந்து வருகின்றனர்.

இராணுவத்தையும் வான் மற்றும் கடற்படையையும் அனுப்பியுள்ள ஸ்பெயின் அரசு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த மொராக்கோவுடன் இணைந்து புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே கண்காணிப்பை அதிகரித்தல், தடுப்பு அரண்களை அமைத்தல் மொராக்கோ அரசுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் என எல்லைப் பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பை ஸ்பெயின் அதிகரித்துள்ள நிலையிலும் இந்த ஊடுருவல் அரசியல் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் மெலிலாவை அடைய முயற்சிக்கும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் வருகையை ஊக்குவிப்பதற்காக இந்த மாதிரியான எல்லைத் தாண்டலை மனிதக் கடத்தல் நெட்வொர்க் பயன்படுத்திக் கொள்வதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

எல்லைப் பகுதிகள் முழுமையான குழப்பத்தில் உள்ளதாகவும் எல்லைக் கட்டுப்பாடு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும் ஸ்பெயின் குடிமைக் காவல் சங்கத்தின் தலைவர் ரஷீத் ஸ்பிஹி, தெரிவித்துள்ளார்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார்.

Ceuta சியூட்டாவிலிருந்து வந்த படங்கள் “வியக்கத்தக்கவை” என்றும், “கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பாவின் எல்லைகளின் பாதுகாப்பிற்கு ஒரு உறுதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதைச் சுட்டிக் காட்டுவதாகவும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ஷெங்கன் பகுதி என்பது, தங்களின் பொது எல்லைகளில் உள்ள கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நீக்கிய 29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு திறந்த எல்லை அமைப்பாகும் என்பதால், இந்த ஊடுருவல்களை தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஸ்பெயினுடனான திறந்த எல்லை ஷெங்கன் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Tags: CeutaMelillamoroccoMorocco migrantsillegal crossings.spain border
ShareTweetSendShare
Previous Post

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

Next Post

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies