வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், மாநிலத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்து முதலமைச்சர் விஜய் ஜனநாயக ரீதியாக பேரவையில் அமர்ந்துள்ளார் என்றார்.
கடந்த 3 மாதங்களில் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்ததாகவும்,
சமூகநீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், மாநிலத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மரிய வில்சன்,
திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை 48 ஆயிரத்து 696 கோடியே 32 லட்சம் ரூபாயாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
















