புவிசார் அரசியலில் திருப்பம் மையப்புள்ளியாக மாறிய சபாஹர் துறைமுகம்!
Jan 14, 2026, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புவிசார் அரசியலில் திருப்பம் மையப்புள்ளியாக மாறிய சபாஹர் துறைமுகம்!

இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் உறவில் மலரும் புதிய அத்தியாயம்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் உடனான உறவு மோசமடைந்த நிலையில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் நெருங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக ஈரானின் சபாகர் துறைமுகம் உள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்கானிஸ்தானில் உள்ள வர்த்தகர்கள் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை 90 நாட்களுக்குள் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமர் முல்லா அப்துல் கானி பரதார் அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா-ஆப்கனிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், ஈரானின் சபாஹர் துறைமுக வழித்தடத்தை முழுமையாக செயல்படுத்துவது, சுங்கம் மற்றும் வங்கி நடைமுறைகளை எளிமையாக்குவது, போன்ற நடவடிக்கைகள் மூலம், 2021-க்கு முந்தைய 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

வணிக விசாக்களை விரைவாக வழங்குதல், சபாஹர் துறைமுகத்திலிருந்து வழக்கமான கப்பல் பாதைகளைத் தொடங்குதல், நிம்ருஸ் மாகாணத்தில் உலர் துறைமுகங்களை உருவாக்குதல் மற்றும் நவா ஷேவா துறைமுகத்தில் ஆப்கானிய பொருட்களுக்கான இறக்குமதி-ஏற்றுமதி செயல்முறைகளை எளிதாக்குதல் மட்டுமில்லாமல், மருந்துகள், குளிர்பதன சேமிப்பு சங்கிலிகள், பழ பதப்படுத்தும் அலகுகள், தொழில்துறை பூங்காக்கள், SME மையங்கள் மற்றும் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் கூட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தியாவுடனான ஆப்கானிஸ்தான் வர்த்தகத்துக்கு ஈரானின் சபாஹர் துறைமுகம் முக்கிய மைய புள்ளியாக உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இந்த துறைமுகம் ஓமன் வளைகுடாவுக்கு அருகில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தானைத் தவிர்த்து இந்தியா மற்றும் மத்திய ஆசியாவுக்கு நேரடி வழியை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குகிறது. இந்தியாவுடனான வர்த்தக போக்குவரத்தை மேம்படுத்த உஸ்பெகிஸ்தானும் இந்த துறைமுகத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 13 உறுப்பு நாடுகளுடன் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் 2000ம் ஆண்டில் முறையாக தொடங்கப்பட்டது. சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்துடனும் (INSTC)இணைப்பில் உள்ள சபாஹர் துறைமுகம், இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை இணைக்கிறது.

இதனால் இந்நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்து பயண நேரம் கணிசமாகக் குறைகிறது. துருக்கி, ஜார்ஜியா, அஜர்பைஜான் மற்றும் ஈரானுடன் ஆர்மீனியா எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஈரானை கருங்கடல் பகுதி மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் பாலமாக ஆர்மீனியா உள்ளதால் , சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் விரிவாக்கத்துக்காக இந்தியாவும், ஈரானும், ஆர்மீனியாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

சபாஹர் துறைமுகம் மற்றும் ஆர்மீனியா பாதை போன்ற புதிய வழித்தடங்களை அதிக அளவில் பயன்படுத்துவது மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான இந்தியாவின் வர்த்தக தொடர்புகளை அதிகப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியா கட்டிய ஜரஞ்ச்-டெலாராம் நெடுஞ்சாலையுடன் இணைந்து, ஒரு மீள்தன்மை கொண்ட மல்டிமாடல் நடைபாதையை உருவாக்கியுள்ளது. இந்திய தொழிற்சாலைகளில் இருந்து பொருட்கள் கடல் வழியாக சபாஹருக்குச் சென்று, அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்குச் செல்கின்றன.

2023ம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதியே பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து, ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாக முதன்முறையாக இந்தியாவுக்குப் பொருட்களை ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. முதல் முறையாக மேற்கு ஆப்கானிஸ்தானின் ஜராஞ்ச் நகரத்திலிருந்து 570 டன் உலர்ந்த பழங்கள், ஜவுளி, தரைவிரிப்புகள் மற்றும் கனிமப் பொருட்கள் இருபத்தி மூன்று லாரிகளில் ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

இதன் மூலம், ஆப்கானிஸ்தானை ஒரு இறக்குமதி நாடு என்பதில் இருந்து ஏற்றுமதி நாடாக சபாஹர் துறைமுகம் மாற்றியது. முன்னதாக, 2017ம் ஆண்டில் சபாஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 1.1 மில்லியன் டன் கோதுமையை இந்தியா வெற்றிகரமாக அனுப்பியது. அதே ஆண்டில், இருதரப்பு வர்த்தகத்திற்காக காபூலுடன் ஒரு விமான வழித்தடத்தையும் இந்தியா தொடங்கியது. ஆப்கானிஸ்தானுக்கான வர்த்தகப் பாதை தொடங்கப்பட்டதாகவும் இது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற பரந்த யூரேசிய நெட்வொர்க்குகளுக்கு ஆப்கானிஸ்தானை இணைத்து வைத்த இந்தியா அந்நாட்டின், இறக்குமதி-ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இனியும் பாகிஸ்தானின் நிழலில் வாழ விரும்பாத ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் நெருக்கம் காட்டுகிறது. பாகிஸ்தான் மூடிய கதவை இந்தியா திறக்கிறது. இது புதிய புவிசார் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

Tags: Chabahar Porta turning point in geopolitics: A new chapter blossoming in India-Iran-Afghanistan relationsஇந்தியா - ஈரான் -ஆப்கானிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு – பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

Next Post

தகர்க்க நினைத்தால் புஸ்வானமாகும் : விளாடிமிர் புதினை கட்டிக் காக்கும் AURUS கார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies