கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு - பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!
Sep 12, 2026, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு – பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வரும் பாகிஸ்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடற்ற அளவிலான மக்கள்தொகை பெருக்கம் தேசிய பேரழிவு என்றும் விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தானின் வளம், பொருளாதாரம், மக்கள் தொகை போன்றவை குறித்து, பாகிஸ்தான் மக்கள்தொகை உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய நிபுணர்கள், பாகிஸ்தான் மக்கள் தொகை பேரழிவின் விளிம்பில் உள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தனர்.

நாடு முழுவதும் கட்டுப்பாடற்ற அளவில் பெருகிவரும் மக்கள் தொகை வளர்ச்சி, நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை கபளீகரம் செய்யும் வகையில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தனர். மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில், அவசர தேசிய கவனம் தேவை என்பதை எடுத்துரைத்த அவர்கள், இதனை “இருத்தலியல் நெருக்கடி” என்றும் விவரித்தனர்.

மக்கள்தொகை பெருக்கமானது சுகாதார அமைப்பு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, தொழிலாளர் சந்தை, கல்வி உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த நகர்ப்புற நிலைத்தன்மையை அச்சுறுத்துவதாகவும் நிபுணர்கள் கூறினர்.

தீர்க்கமான நடவடிக்கை இல்லை என்றால், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கான முயற்சிகள் பலனற்றதாகிவிடும் என்றும் எச்சரித்தனர். மேலும் மக்கள்தொகை அதிகரிப்பு, சுகாதார சேவைகளை பாதிப்பதோடு, அரசியலமைப்பு வழங்கும் உரிமையையும் பறித்துவிடும் என்று கூறினர். விரிவான சீர்திருத்தங்களைத் தொடர ஒரு நாடாளுமன்றக் குழு, மக்கள்தொகை கட்டுப்பாடுகுறித்து தேசிய அளவில் தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்டது.

“மதம் குடும்பக் கட்டுப்பாட்டைத் தடுக்காது” என்பதும் உச்சிமாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் மேற்கோள் காட்டியபடி இஸ்லாமிய கொள்கைகளுக்குள் பிறப்பு இடைவெளியை ஆதரிக்கும் நிபுணர்கள், மக்கள்தொகை மேலாண்மையை “கூட்டு தார்மீகக் கடமை” என்றும் கூறினர்.

அதே நேரத்தில் இஸ்லாம் வறுமை பயத்தை விட, சுகாதார காரணங்களுக்காகப் பிறப்பு இடைவெளியை ஆதரிப்பதாகவும், முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பாகிஸ்தானின் மக்கள்தொகை சவாலை நிர்வகிப்பதில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதும், கல்வியும் மையமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பேராபத்தான மக்கள்தொகையை கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்பதுதான் நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Tags: pakistannewsTodayUncontrolled population: National disaster - Experts warn Pakistan
Share
Tweet
SendShare
Previous Post

பழிவாங்கத் துடிக்கும் JeM : 5000 பெண் ஜிகாதிகள் – அடங்காத மசூத் அசார்!

Next Post

புவிசார் அரசியலில் திருப்பம் மையப்புள்ளியாக மாறிய சபாஹர் துறைமுகம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies