கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு - பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!
Jan 14, 2026, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு – பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வரும் பாகிஸ்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடற்ற அளவிலான மக்கள்தொகை பெருக்கம் தேசிய பேரழிவு என்றும் விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தானின் வளம், பொருளாதாரம், மக்கள் தொகை போன்றவை குறித்து, பாகிஸ்தான் மக்கள்தொகை உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய நிபுணர்கள், பாகிஸ்தான் மக்கள் தொகை பேரழிவின் விளிம்பில் உள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தனர்.

நாடு முழுவதும் கட்டுப்பாடற்ற அளவில் பெருகிவரும் மக்கள் தொகை வளர்ச்சி, நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை கபளீகரம் செய்யும் வகையில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தனர். மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில், அவசர தேசிய கவனம் தேவை என்பதை எடுத்துரைத்த அவர்கள், இதனை “இருத்தலியல் நெருக்கடி” என்றும் விவரித்தனர்.

மக்கள்தொகை பெருக்கமானது சுகாதார அமைப்பு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, தொழிலாளர் சந்தை, கல்வி உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த நகர்ப்புற நிலைத்தன்மையை அச்சுறுத்துவதாகவும் நிபுணர்கள் கூறினர்.

தீர்க்கமான நடவடிக்கை இல்லை என்றால், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கான முயற்சிகள் பலனற்றதாகிவிடும் என்றும் எச்சரித்தனர். மேலும் மக்கள்தொகை அதிகரிப்பு, சுகாதார சேவைகளை பாதிப்பதோடு, அரசியலமைப்பு வழங்கும் உரிமையையும் பறித்துவிடும் என்று கூறினர். விரிவான சீர்திருத்தங்களைத் தொடர ஒரு நாடாளுமன்றக் குழு, மக்கள்தொகை கட்டுப்பாடுகுறித்து தேசிய அளவில் தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்டது.

“மதம் குடும்பக் கட்டுப்பாட்டைத் தடுக்காது” என்பதும் உச்சிமாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் மேற்கோள் காட்டியபடி இஸ்லாமிய கொள்கைகளுக்குள் பிறப்பு இடைவெளியை ஆதரிக்கும் நிபுணர்கள், மக்கள்தொகை மேலாண்மையை “கூட்டு தார்மீகக் கடமை” என்றும் கூறினர்.

அதே நேரத்தில் இஸ்லாம் வறுமை பயத்தை விட, சுகாதார காரணங்களுக்காகப் பிறப்பு இடைவெளியை ஆதரிப்பதாகவும், முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பாகிஸ்தானின் மக்கள்தொகை சவாலை நிர்வகிப்பதில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதும், கல்வியும் மையமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பேராபத்தான மக்கள்தொகையை கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்பதுதான் நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Tags: pakistannewsTodayUncontrolled population: National disaster - Experts warn Pakistan
ShareTweetSendShare
Previous Post

பழிவாங்கத் துடிக்கும் JeM : 5000 பெண் ஜிகாதிகள் – அடங்காத மசூத் அசார்!

Next Post

புவிசார் அரசியலில் திருப்பம் மையப்புள்ளியாக மாறிய சபாஹர் துறைமுகம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies