குளுகுளு பிரதேசமான சவுதி அரேபியா : காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை மணி!
Jan 14, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குளுகுளு பிரதேசமான சவுதி அரேபியா : காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை மணி!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? இது குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

எங்கும் பார்த்தாலும் பனிப்பொழிவு.. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பனி போர்த்திய பகுதிகள். வாகனங்கள் மற்றும் வீடுகளை முழுவதுமாக மூடிய உறைப்பனி. நீங்கள் பார்க்கும் இந்த இடம் காஷ்மீரோ அல்லது ஏதேனும் ஐரோப்பிய நாடோ இல்லை. பாலைவன நாடான சவுதி அரேபியாதான் இது. அரேபியா என்றாலே அனைவருக்கும் சுட்டெரிக்கும் வெயிலும், ஆண்டு முழுவதும் நீடிக்கும் வறட்சியும்தான் நினைவுக்கு வரும்.

ஆனால், அந்தப் பிம்பத்தை மாற்றிக்கொண்டு, பனிபொழியும் நாடாகத் தற்போது மாறியுள்ளது சவுதி அரேபியா. சவுதி அரேபியாவின் வெப்பநிலையில் பெரும் வீழ்ச்சி இருக்கும் என அந்நாட்டு தேசிய வானிலை மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.

பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே, நியோம் பகுதியில் உள்ள ட்ரோஜெனா ஹைலேண்ட்ஸிலும், Tabuk மாகாணத்திலும் வெப்பநிலை குறைய தொடங்கியது.

அடுத்த சில நாட்களில் ஜபல் அல்-லாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. பின்னர், அடுத்தடுத்து பல பகுதிகளிலும் பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழாக வெப்பநிலை பதிவாகி, பனிப்பொழிய தொடங்கியது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், அல்உலா கவர்னரேட், ஷக்ரா உள்ளிட்ட பகுதிகளில் மழையும் பதிவானது. குறிப்பாக, சவுதியின் மேற்கே உள்ள துவைக் மலைத்தொடரில் இருந்து ரியாத் பகுதி வரையுள்ள பாலைவனத்தில் கடந்த சில நாட்களாகப் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

பல இடங்களில் பனிச்சறுக்கு விளையாடும் அளவுக்கு உறைபனி காணப்படுகிறது. ஆண்டுதோறும் வெறும் வெயிலை மட்டும் பார்த்துப் பழகிய சவுதி மக்கள், இந்தத் திடீர் பனிப்பொழிவால் உற்சாகம் அடைந்துள்ளனர். பனிப்பொழியும் பகுதிகளுக்குச் சென்று நேரம் செலவிட்டு மகிழ்ந்தும் வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பனிப்பொழிவு சவுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தித்தொடர்பாளரான ஹுசைன் அல்-கஹ்தானி, சவுதியின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் திடீரென மிகவும் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியதே இந்தத் திடீர் பனிப்பொழிவுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கத்திற்கு மாறாக இப்படி குளிர்ந்த காற்று வீசியதற்கு காலநிலை மாற்றம்தான் காரணம் என ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனை சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொண்டு, கடந்து செல்ல முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மை காலமாகவே, காலநிலை மாற்றத்தால் எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தேறி வருகின்றன. அமேசான் காடுகள் ஆக்சிஜனுக்கு பதிலாக, கார்பனை வெளியேற்றி வருவதாக அண்மையில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். குறைந்த வெப்பநிலை கொண்டிருக்க வேண்டிய கடல்பகுதியில் வெப்பம் அதிகரித்ததால்தான் டிட்வா உள்ளிட்ட புயல்கள் ஏற்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதுபோன்றதொரு தலைகீழான மாற்றம்தான், தற்போது சவுதியிலும் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுவது ஒன்றுதான், “காலநிலை மாற்றத்தின் மற்றொரு எச்சரிக்கை மணி..”

Tags: saudi arabiathe land of the Kurukulu: A warning bell for clmate change!குளுகுளு பிரதேசமான சவுதி அரேபியா
ShareTweetSendShare
Previous Post

தேனி அரசு மருத்துவக் கல்லூரி – ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

Next Post

தவெக தலைவர் விஜய்யின் காரை வழிமறித்த பெண் நிர்வாகி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies