லண்டனில் இருந்து சென்னை வந்த இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரத்திற்கு தமிழக அரசு சார்பாக வரவேற்பளிக்கப்பட்டது.
லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா என்ற இசை நிகழ்ச்சியை 92 இசைக் கலைஞர்களை கொண்டு லிடியன் நாதஸ்வரம் லண்டனில் உருவாக்கினார். இவரது இந்த முயற்சி அனைத்து ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற நிலையில் விமானம் மூலம் சென்னை திரும்பிய அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அப்போது அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு ஆகியோர் லிடியன் நாதஸ்வரத்திற்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இரண்டு அமைச்சர்களும் அவரது பாடலை நேரில் கண்டு ரசித்தனர்.
















