உதகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக எம்எல்ஏ போஜராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக உறுப்பினர் போஜராஜன், உதகை அரசு மேல் நிலைப்பள்ளியில்தான் தாம் படித்ததாகவும், அங்குள்ள மைதானம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
பள்ளி மைதானத்தை பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர், பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மலைவாழ் மக்கள் வசிக்கும் கல்வராயன் மலைப் பகுதி, உதகை பகுதியில் விளையாட்டை கொண்டு சேர்க்க அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார். மேலும், பாஜக உறுப்பினர் விடுத்துள்ள கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
















