சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்- பிரதமர் நரேந்திர மோடி
Aug 26, 2026, 01:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்- பிரதமர் நரேந்திர மோடி

Murugesan M by Murugesan M
Jul 26, 2023, 07:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில், சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு  அர்ப்பணித்தார். இது தற்போது  ஜி 20 தலைவர்களின் கூட்டத்தை நடத்த தயாராக உள்ளது.

IECC வளாகம், ஜெர்மனியில் உள்ள ஹானோவர் (Hannover) கண்காட்சி மையம் மற்றும் ஷாங்காயில் உள்ள தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (NECC) போன்ற புகழ்பெற்ற பெயர்களுடன் போட்டியிடும், உலகளவில் முதல் 10 கண்காட்சி மற்றும் மாநாட்டு மையங்களில் ஒன்றாக உள்ளது. இது ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸை விட இது பெரிய மாநாட்டு மையம் ஆகும்.

நாட்டில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (ஐ.இ.சி.சி) கருத்தாக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த திட்டம், சுமார் 2700 கோடி ரூபாய் செலவில் ஒரு தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. சுமார் 123 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஐ.இ.சி.சி வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடத்த  உருவாக்கப்பட்டுள்ளது.  பிரகதி மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐ.இ.சி.சி வளாகத்தில் மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள், வட்ட வடிவில் திறந்தவெளி அரங்குகள் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகள் உள்ளன. மாநாட்டு மையம் பிரகதி மைதான வளாகத்தின் மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டிடக்கலை அதிசயமாகும், இது பெரிய அளவிலான சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பிற மதிப்புமிக்க நிகழ்வுகளை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பல கூட்ட அறைகள், ஓய்வறைகள், ஆடிட்டோரியங்கள்,  மற்றும் வணிக மையம் ஆகியற்றைக் கொண்டுள்ளது.இது பரந்த அளவிலான நிகழ்வுகளை  நடத்தும் திறன் கொண்டது.  இதன்  கம்பீரமான பல்நோக்கு அரங்கம் மற்றும்முழுமையான மண்டபம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ஏழாயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதியைக் கொண்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி ஓபரா ஹவுஸின் இருக்கை திறனை விட பெரியது. இதன் அற்புதமான ஆம்பிதியேட்டர் 3,000 பேர் அமரும் திறன் கொண்டது.

மையம் கட்டிடத்தின் கட்டிடக்கலையின் வடிவமைப்பு இந்திய பாரம்பரியங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு, நவீன வசதிகள் மற்றும் வாழ்க்கை முறையை தழுவும் அதே நேரத்தில் அதன் கடந்த காலத்தில் இந்தியாவின் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது.

கட்டிடத்தின் வடிவம் சங்கு வடிவில் உள்ளது. மாநாட்டு மையத்தின் பல்வேறு சுவர்கள் மற்றும் முகப்புகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் ‘சூரிய சக்தி’, ‘ஜீரோ டூ இஸ்ரோ’, விண்வெளியில் நமது சாதனைகளைக் கொண்டாடும் பஞ்ச மகாபூதம் – ஆகாஷ் (ஆகாயம்), வாயு (காற்று), அக்னி (நெருப்பு), ஜல் (நீர்), பிருத்வி (பூமி) உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தின் பல கூறுகளை சித்தரிக்கின்றன.  மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு ஓவியங்கள் மற்றும் பழங்குடி கலை வடிவங்கள் மாநாட்டு மையத்தை அலங்கரிக்கின்றன.

மாநாட்டு அரங்கில் 5ஜி வசதியுடன் கூடிய முழுமையான வைஃபை வசதி, 10ஜி இன்ட்ராநெட் இணைப்பு, 16 மொழிகளை பயன்படுத்தி, அவரவர் விருப்பத்திற்கேற்ப மொழி பெயர்க்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பிரேட்டர் அறை, பெரிய அளவிலான வீடியோ திரைகளுடன் கூடிய மேம்பட்ட ஒலி-ஒளி அமைப்புகள், உகந்த செயல்பாடு மற்றும் ஆற்றல் செயல்திறனை உறுதி செய்யும் கட்டிட மேலாண்மை அமைப்பு, டிம்மிங் மற்றும் ஆக்கிரமிப்பு சென்சார்களுடன் கூடிய ஒளி மேலாண்மை அமைப்பு, அதிநவீன டி.சி.என் (டேட்டா கம்யூனிகேஷன் நெட்வொர்க்) அமைப்பு  ஆகியவை மாநாட்டு அரங்கில் உள்ள பிற வசதிகளாகும். ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வளாகம் மொத்தம் ஏழு கண்காட்சி அரங்குகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வணிக நிகழ்வுகளை நடத்துவதற்கான பல்துறை இடமாக செயல்படுகின்றன. கண்காட்சி அரங்குகள் பல்வேறு வகையான தொழில்களுக்கு இடமளிக்கும் வகையிலும், உலகெங்கிலும் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கட்டமைப்புகள் நவீன பொறியியல் மற்றும் கட்டிடக்கலை திறமைக்கு சான்றாகும்.

இங்குள்ள சிற்பங்கள், நிறுவல்கள் மற்றும் சுவரோவியங்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன; இசை நீரூற்றுகள் வசீகரம் மற்றும் காட்சியின் ஒரு அம்சத்தை சேர்க்கின்றன; குளங்கள், ஏரிகள் மற்றும் செயற்கை நீரோடைகள் போன்ற நீர்நிலைகள் இப்பகுதியின் அமைதியையும் அழகியலையும் மேம்படுத்துகின்றன.

இங்கு பார்வையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, இது 5,500 க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வசதி கொண்டது. சிக்னல் இல்லாத சாலைகள் வழியாக எளிதாக அணுகுவதால் பார்வையாளர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் அந்த இடத்தை அடைய முடியும். மேலும், ஒட்டுமொத்த வடிவமைப்பு பங்கேற்பாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது, இது வளாகத்திற்குள் தடையற்ற இயக்கத்தை எளிதாக்குகிறது.

பிரகதி மைதானத்தில் புதிய வளாகத்தின் வளர்ச்சி இந்தியாவை உலகளாவிய வணிக இடமாக மேம்படுத்த உதவும். இது தொழில் மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும். இது தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். இது அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கும் மற்றும் சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில் போக்குகளின் பரவலை ஊக்குவிக்கும். இது தற்சார்பு இந்தியாவின் உணர்வில் நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சிறப்பை பிரதிபலிக்கிறது மற்றும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் மூன்றாவது முறையாக நீட்டிப்பு – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 

Next Post

தனது 3- வது பதவிகாலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பிரதமர் நரேந்திர  மோடி திட்டவட்டம்

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies