எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ-க்கள் தனி அணியாக செயல்பட்டு தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தனர்.
இதன் காரணமாக அவர்கள் அனைவரும் அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பலகட்ட சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இபிஎஸ் தரப்புடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் இணைந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிமுக துணை பொதுச் செயலாளர்களாக எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி. வீரமணி, திருத்தணி கோ.அரி, பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, மருதராஜா, சௌந்தரராஜன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலர்களாக எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்…
















