திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் - போக்குவரத்து மாற்றம்!
Jun 26, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடப்படும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இச்சாலையில், காவிரி ஆற்றின் குறுக்கே பழமையான பாலம், புதிய பாலங்கள் உள்ளது. மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் சாலையில் ஒரு வழிபாதையாக பழைய காவிரி பாலமும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை செல்லும் வாகனங்கள் அனைத்தும் புதிய பாலத்தின் வழியாக ஒரு வழிப்பாதையில் செல்கின்றது.

இதுதவிர, மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களும் போக்குவரத்துக்கு இப்பாலங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் இடையே அமைந்துள்ள பழைய காவிரி பாலத்தை வலுப்படுத்தும் பணிகள் பராமரிப்பு வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நேற்று ஜூன் -25 ஆம் தேதி நள்ளிரவு முதல் பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் திருச்சி – சென்னை தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள பழைய காவிரி பாலம் கட்டப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டாலும், அதில் உள்ள பேரிங்குகள் சேதமடைந்துள்ளது. அதனால், பாலம் முழுக்க உள்ள 170 பேரிங்குகள் முழுமையாக மாற்றி, பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும், 3 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவரை, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் ஸ்ரீரங்கம் பகுதிகளை இணைக்கும் பழைய காவிரி பாலம் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் :

பராமரிப்பு பணிகளுக்காக பாலம் மூடப்பட உள்ளதால், திருச்சியிலிருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சா்க்காா்பாளையம் அணுகுசாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவி நகா் வழியாகவும் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: Trichy-Chennai National Highwaytrichymaintenance workTraffic Diversionold Cauvery Bridge close
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

Related News

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா – மத அடையாளத்துடன் பங்கேற்ற அமைச்சர்!

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு – இபிஎஸ் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies