ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? - அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!
Aug 12, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? – அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் மரபார்ந்த பெருந்தன்மையா? என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு தவெக எம்எல்ஏ முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:  அன்பின் திருவுருவம் அறிவின் மறு உருவம் என்று பெயர் பெற்ற அண்ணன் தொல்.திருமாவுக்கு அன்பையும் அறிவையும் மழையாகப் பொழியும் நீங்கள் மரபு குறித்தும் மாண்பு குறித்தும் பாடம் எடுக்கத் தகுதியானவரே.

மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. மாச்சர்யமோ ஆச்சர்யமோ கொள்ள மனமில்லை. அடராழ் அரசியல் பயணம் உங்களுடையது. அது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அண்ணா…நீங்கள், வாளும் வார்த்தையும் வீச வேண்டிய திசை எது என்று அறியாமல் திகைத்து நிற்பது ஏன் அண்ணா?.

சட்டசபையில் Evil குறித்துப் பேசியது உலகத்தின் காதுகளிலேயே விழுந்தது. உங்கள் காதுகளை அது எட்டவில்லையே. ஏன் அண்ணா?.

தற்குறி என்றெல்லாம் சபைக்கு வரும் வெளிவாயிலில் நின்று வன்ம கோஷம் பாடியது வாழ்த்துக்குரிய செயல் என்று எண்ணிவிட்டீர்களோ அண்ணா?. வாயத் தொறங்க சி.எம் என்று அட்டை ஏந்தி நின்றதை அரசியல் அறமென்று எண்ணி விட்டீர்களோ அண்ணா?.

வக்கற்றவர் என்று முதல்வர் மீது வஞ்சம் கொண்டு வசை பாடியது உங்களுக்கு வாஞ்சை மொழியாகத் தெரிகிறதா அண்ணா?. ஷோஃபா மாடல் என்று சுத்தப் பொய்ச் சூத்திரம் சொல்லி உங்களையும் அந்த அவதூறுப் பட்டியலில் சேர்த்தது அகமகிழச் செய்யும் செயலா அண்ணா?.

எங்கள் தயவில் ஆட்சி நடத்துகிறீர்கள். எங்கள் வாக்குகளில் ஆட்சி நடத்துகிறீர்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இதுவும் எங்கள் ஆட்சிதான் என்று எகத்தாளம் பேசியது அரசியல் மாண்பின் இலக்கணமா அண்ணா?.

அறிவார்ந்த ஜனநாயக அரசியலா அண்ணா?. புதிய இலக்கணப் புணர்ச்சி விதி கூறியவர்கள் எல்லாம் புத்தாக்க அரசியல் புரிதல் கொண்டவர்களா அண்ணா?. 65சதவீதம் பேர் எதிராக வாக்களித்தனர். ஆகவே, இந்த வெற்றி ஜனநாயகமற்றது எனபது போன்று மடமைப் பொங்கல் வைத்தது மகத்தான ஜனநாயகப் புரிதலா அண்ணா?.

ஆயிக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான உயிர்களின் வாழ்வாதாரமான ஒரு தொழிலை அவமானகரமாக ஆக்கிப் பேசியது அறம்நிறைந்த அரசியலா அண்ணா?. அயிட்டம் சாங் போட்டாலும் போடுவார்கள் என்று பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது கொள்கை அரசியலா அண்ணா?.

மக்கள் தீர்ப்புக்கு எதிராக எதற்கெடுத்தாலும் எங்கள் தலைவர் தயவால் ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பொறாமையில் பொய் சொன்னால் ‘எங்கே அவர்?’ என்று கேட்பது இயல்புநிலை இல்லையா அண்ணா?. சாமானியர்களின் சமூக நீதி அரசின் மீது சகதி வீசுவதை சரி என்கிறீர்களா அண்ணா?.

ஜனநாயகம் காக்கும் சக்திகளைச் சகட்டுமேனிக்குச் சங்கடப்படுத்திப் பேசுவது சங்கத்தமிழ் அரசியல் மரபா அண்ணா?. பிளாஸ்டிக் சேர் போட்டவர்களின் பிளாஸ்டிக் அரசியல் பிதற்றலை இன்னுமா உணரவில்லை அண்ணா?. எல்லை தாண்டி விமர்சிப்பவர்களை, ஏசுபவர்களை, ஏகடியம் பேசுபவர்களை, உச்சமாக ஏளனம் செய்பவர்களை குறிப்பால் உணர வைப்பதுகூட குற்றமா அண்ணா?.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதுதான் தத்துவ அரசியலா அண்ணா?. தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்றாலும் தானாகத் தேடிச் சென்ற மனதை தாங்கள் அறியாமல் இருப்பது ஏன் அண்ணா?. பெற்றோர் வைத்த பெயரைச் சொல்லிவிட்டு, பட்டப்பெயரைச் சொல்லாமல் விட்டதற்காக வருந்திய உள்ளத்தை நீங்கள் வருத்தப்படுத்தியது ஏன் அண்ணா?.

மாண்பு காக்கும் மரபார்ந்த சபையில், தன் மீது ‘ஏய்’ என்று ஒருமையில் வாய்க்கொழுப்பில் சொல்லெறிந்த போதும் அமைதியாகப் புன்சிரிப்பை உதிர்த்தபடி நின்ற உள்ளத்தின் மீது உக்கிரமான சொல் எறிய உங்களுக்கு மனம் வந்தது எப்படி அண்ணா?. ‘வக்கற்ற’, ‘டம்மி’ என்றெல்லாம் வகைதொகை இல்லாமல் பேசுவோர் மீது ஒரு வார்த்தைக்கூட உதிர்க்காமல் இருப்பதுதான் அரசியல் உத்தமமா அண்ணா?.

ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் தாரக மந்திரம் என்று சொல்லும் நீங்கள் அதைச் சாத்தியப்படுத்திய ஜனநாயக உள்ளத்தின் மீது சகதி வீசுவோரைக் கண்டிக்காததுதான் சத்திய அரசியலா அண்ணா?. ‘எங்கள் கூட்டணியில் யாரும் இல்லை’ என்று திருமண வீடுகளில்கூட திட்டித் தீர்ப்பவர்களின் குரலாக எங்கள் மக்கள் தலைவர் ஆட்சியின் அங்கமாக பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் மரபார்ந்த பெருந்தன்மையா அண்ணா?. மதிப்பிற்குரிய அண்ணா எது மரபு?? என முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: TVK MLA MUSTHAFAVijayvcktvktirumavalavan
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Next Post

ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை – அமைச்சர் ராஜ்மோகன்

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies