பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை வெல்வாரா?
Sep 6, 2026, 03:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை வெல்வாரா?

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.

இறுதி போட்டியில் உலகில் நம்பர் 1 செஸ் போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார்கள். இதில் முதலாம் சுற்று டிராவில் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டாம் சுற்றில் யார் வெற்றிபெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் – பிரக்ஞானந்தா இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.

வெள்ளை காய்களுடன் ஆடிய கார்ல்சனுக்கு பிரக்ஞானந்தாவை அட்டாக் செய்வதற்கான சாதகங்கள் அமைந்திருந்தும், தொடக்கம் முதலே டிராவுக்காகவே ஆடிக்கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போட்டி, கடைசியில் டிராவில் முடிந்தது.

போட்டிக்குப் பின் பிரக்ஞானந்தா , “இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்றில் இவ்வளவு விரைவாக டிராவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரின் நகர்வுகள் டிராவுக்கானதாக இருந்ததை நான் அறிந்துகொண்டேன். எனக்கும் அது சரியென்று தோன்றியது. ஏனென்றால் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருகிறேன். இருந்தாலும் நாளை ஒட்டுமொத்தமாக வெற்றிக்காக விளையாட போகிறேன்.

கார்ல்சனும் விளையாடும் போது சற்று உடல் சோர்வுடனே காணப்பட்டார். நிச்சயம் டை பிரேக்கர் சுற்றுகள் சிறிய ஆட்டமாக இருந்தாலும், அதிகப்படியான ஆட்டங்கள் நடக்கும் என்று நினைக்கிறேன். அதனால் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்நிலையில் இன்று மூன்றாவது சுற்று நடைபெறுகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக சர்வதேச கவனத்தைத் தன்பக்கம் திருப்பியுள்ளார் பிரக்ஞானந்தா.

20 ஆண்டுகளுக்குப் பின் செஸ் உலகக்கோப்பையை வெல்லும் இந்திய வீரர் என்ற சாதனையைப்  பிரக்ஞானந்தா படைப்பார் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Tags: chessPragyananda Chess
Share
Tweet
SendShare
Previous Post

கிடுகிடு என உயர்ந்த பூக்களின் விலை – என்ன காரணம்

Next Post

தாயைப் பராமரிக்கத் தவறிய மகன்: கலெக்டர் கொடுத்த நூதன தண்டனை!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies