கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!
Apr 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் பாரத் நெட் திட்ட சேவை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில், 5ஜி இணைய சேவையைச் செயல்படுத்துவதற்கான சூழல் உருவாக்கித் தரப்படும் என்றும், பாரத் நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வழி சேவை தொடங்கப்படும் என்றும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், (கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்) அறிவித்திருந்தார்.

குறிப்பாக, கிராமம் தோறும் இணைய வசதி என்ற நோக்கோடு, நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், கிராம பஞ்சாயத்து, மற்றும் வட்டாரங்களை ஒன்றிணைப்பது, இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய வசதியை ஆப்டிகல் ஃபைபர் மூலம் வழங்குவது என்றும், அதன்படி சுமார் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகப் பல்வேறு மாநிலங்களில், பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்டு, கிராமப்புற மக்களுக்குச் சேவை வழங்கப்பட்டுவருகிறது.

அதன்படி, மத்திய அரசின் உதவியோடு, தமிழகக்தில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல், கோவை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளிலும் முழு வீச்சில், பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்கம்பங்கள் வழியாக 85 சதவீதமும், தரைவழியாக 15 சதவீதமும் கண்ணாடி இலை இணைப்பு வழங்கப்பட உள்ளது.

பிரதமர் மோடியின் சீரிய வழிகாட்டுதலின் பேரில், ஒவ்வொரு கிராமத்திற்கும், இணைய வசதி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் வளரும், கிராமத்தில் உள்ளவர்களும், ஏன், குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட இணைய வசதியைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம், தொலைபேசி சேவை மற்றும் தொலைக்காட்சி வசதி உள்ளிட்டவைகளை பெறமுடியும் என்பதால், இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை மக்களுக்காக அறிமுகம் செய்த பிரதமர் மோடிக்கு, நாடு முழுவதும் பொது மக்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Tags: PM Modibharat net
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம்!

Next Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies