இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 05:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானை திட்டத்தின் மூலம் இந்திய வன உயிரினங்கள் அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் கடந்த இரு ஆண்டுகளாக யானை வழித்தடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவில் யானை வழித்தடங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 150 யானை வழித்தடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையே பரவிக் காணப்படும் நான்கு யானை வாழ்விடப் பிராந்தியங்களில் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் 52 வழித்தடங்களும், வடகிழக்குப் பிராந்தியத்தில் 48 வழித்தடங்களும், தெற்குப் பிராந்தியத்தில் 32 வழித்தடங்களும், வடக்குப் பிராந்தியத்தில்18 யானை வழித்தடங்களும் உள்ளன.

இவற்றில், 126 வழித்தடங்கள் மாநில எல்லைக்குள்ளும், 12 வழித்தடங்கள் இரு மாநிலங்களுக்கு இடையையும் அமைந்துள்ளன. மேலும், 6 யானை வழித்தடங்கள் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே அமைந்துள்ளன.

மகாராஷ்டிரத்தின் விதா்பா பிராந்தியம், தெற்கு மகாராஷ்டிரம், ஒடிசாவிலிருந்து மத்தியப் பிரதேசம் மற்றும் வடக்கு ஆந்திரம் என தங்களுக்குரிய எல்லைகளை யானைகள் விரிவுபடுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்கள் யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக அவற்றின் வாழ்விடச் சூழலை மதிப்பீடு செய்வதோடு, தரவுகளின் அடிப்படையில் யானை வழித்தடங்களை அடையாளப்படுத்துவதும் முக்கியமானது.

யானைகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும் வடகிழக்கு மாநிலங்களில், அவற்றின் இடப்பெயா்வும் குறைந்த அளவில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளின் இரு வாழ்விடப் பகுதிகளை இணைக்கும் யானை வழித்தடங்கள், அவைப் புலம்பெயர்வதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தித் தருகின்றன. புலம்பெயர்வு தடைப்படுவதால் யானைகள் தனிமைப்படுத்தப்படுவதோடு, ஒத்த மரபணு விலங்கினங்களுக்கு இடையேயான இனப்பெருக்கம் அவற்றை அழிவு நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இதனால், யானைகளைப் பாதுகாப்பதில் இந்த வழித்தடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Tags: elepantindain elepant
Share
Tweet
SendShare
Previous Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ஜெய் சௌத்ரி.

Next Post

உறுதிமொழியை மறந்த திமுக: போராடிய அரசு டாக்டர்கள் கைது!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies