தெலங்கானாவில் ரூ.8,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!
Sep 1, 2026, 05:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் ரூ.8,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் முதல் அலகு திறப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவில் சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், நிஜாமாபாத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை சத்தீஸ்கர் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிற்பகலில் தெலங்கானா மாநிலத்துக்குச் சென்றார். இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. இம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் அரசை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதையடுத்து, கடந்த 1-ம் தேதி தெலங்கானா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இன்று மீண்டும் தெலங்கானா மாநிலத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். மேலும், என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் 800 மெகாவாட் திறன்கொண்ட முதல் அலகையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒரு மாநிலத்தில் போதுமான அளவு மின்சாரம் இருந்தால்தான், தொழில் செய்வதற்கும், வாழ்வதற்கும் எளிதாக இருக்கும். இன்று என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் பவர் அனல் மின் திட்டத்தின் முதல் அலகு திறந்து வைக்கப்படுகிறது. விரைவில் இரண்டாவது அலகும் (யூனிட்) தொடங்கப்படும். இதன் பிறகு, இத்திட்டத்தின் திறன் 4,000 மெகாவாட்டை எட்டும்.

இந்த தெர்மல் பிளான்ட் நாட்டிலுள்ள இதர தெர்மல் பிளான்ட்களை விட மிகவும் மேம்பட்டுத்தப்பட்டது. எங்களால் தொடங்கப்பட்ட திட்டத்தை, எங்களது அரசாங்கமே நிறைவு செய்து திறந்து வைக்கிறது. இத்திட்டத்திற்கு 2016-ம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இன்று அத்திட்டத்தைத் திறந்து வைக்கிறேன். இது எங்கள் அரசாங்கத்தின் பணி மற்றும் கலாச்சாரமாகும்” என்றார்.

மேலும், தெலங்கானாவை உயர்த்தும் வகையில், இரயில் உள்கட்டமைப்பு, தர்மாபாத் – மனோஹராபாத் மற்றும் மகபூப்நகர் – கர்னூல் இடையேயான மின்மயமாக்கல் திட்டம், மனோஹராபாத் மற்றும் சித்திப்பேட்டையை இணைக்கும் புதிய இரயில் பாதை உள்ளிட்ட இரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுதவிர, சித்திப்பேட்டை – செகந்திராபாத் – சித்திப்பேட்டை இரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags: PM Modilays foundationTelangana8000 croreScheme
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய விளையாட்டுக் குத்துச்சண்டை : இந்தியா வெண்கலம் !

Next Post

3-வது முறையாக பிரதமராகும் மோடி – டைம்ஸ் நவ் வெளியிட்ட பரபரப்பு கருத்துக் கணிப்பு!

Related News

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies