குற்றவியல் சட்ட மசோதாக்கள்: நாடாளுமன்ற நிலைக்குழு நிறுத்திவைப்பு!
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றவியல் சட்ட மசோதாக்கள்: நாடாளுமன்ற நிலைக்குழு நிறுத்திவைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 27, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மாற்றி, சட்ட விதிகள் மற்றும் தண்டனைகளை மாற்றும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றக் குழு நிறுத்தி வைத்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆா்.பி.சி.), சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான 3 மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்தாா்.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) மசோதா 2023’, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆா்.பி.சி.) 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) மசோதா 2023’ மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பி.எஸ்.) மசோதா 2023’ ஆகிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அப்போது பேசிய அமித்ஷா, மேற்கண்ட 3 மசோதாக்களும் இந்திய குற்றவியல் நீதி அமைப்புமுறையை பெரிய அளவில் மாற்றும். விரைவாக நீதி வழங்கவும், மக்களின் சமகால தேவைகள் மற்றும் விருப்பங்களை பூா்த்தி செய்யும் சட்ட அமைப்புமுறையை உருவாக்கவும் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டாா்.

இந்த 3 மசோதாக்களையும் உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு மக்களவை பரிந்துரைத்தது. இந்த மசோதா இன்று நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் மேற்கண்ட மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் நவம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, மேற்கண்ட மசோதாக்களுக்கு நிலைக்குழு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: parliamentary standing committeeIPC CRPC Evidence act3 new bills
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் !

Next Post

திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் !

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies