குற்றவியல் சட்ட மசோதாக்கள்: நாடாளுமன்ற நிலைக்குழு நிறுத்திவைப்பு!
Sep 20, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றவியல் சட்ட மசோதாக்கள்: நாடாளுமன்ற நிலைக்குழு நிறுத்திவைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 27, 2023, 05:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மாற்றி, சட்ட விதிகள் மற்றும் தண்டனைகளை மாற்றும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றக் குழு நிறுத்தி வைத்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆா்.பி.சி.), சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான 3 மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்தாா்.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) மசோதா 2023’, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆா்.பி.சி.) 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) மசோதா 2023’ மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பி.எஸ்.) மசோதா 2023’ ஆகிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அப்போது பேசிய அமித்ஷா, மேற்கண்ட 3 மசோதாக்களும் இந்திய குற்றவியல் நீதி அமைப்புமுறையை பெரிய அளவில் மாற்றும். விரைவாக நீதி வழங்கவும், மக்களின் சமகால தேவைகள் மற்றும் விருப்பங்களை பூா்த்தி செய்யும் சட்ட அமைப்புமுறையை உருவாக்கவும் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டாா்.

இந்த 3 மசோதாக்களையும் உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு மக்களவை பரிந்துரைத்தது. இந்த மசோதா இன்று நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் மேற்கண்ட மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் நவம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, மேற்கண்ட மசோதாக்களுக்கு நிலைக்குழு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: parliamentary standing committeeIPC CRPC Evidence act3 new bills
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் !

Next Post

திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் !

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies