திரிணாமுல் எம்.பி. லஞ்ச விவகாரம்... உண்மையை மறைக்க முடியாது: அனுராக் தாக்கூர் கருத்து!
Apr 29, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் எம்.பி. லஞ்ச விவகாரம்… உண்மையை மறைக்க முடியாது: அனுராக் தாக்கூர் கருத்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், உண்மையை யாராலும் மறைக்க முடியாது. எம்.பி. எப்படி விற்கப்பட்டார் என்பதை நாடு அறிய விரும்புகிறது என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற ஒழுங்குக் கமிட்டி விசாரித்து வருகிறது.

இதனிடையே, வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே ஆகியோர் ஒழுங்கு கமிட்டி முன்பு ஆஜராகினர். அப்போது, கேள்விக்கு பணம் பெற்ற விவகாரத்தில் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிகள் நடப்பதாக மஹுவா மீது பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறார்.

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக பதியப்பட்டுள்ள வழக்கில் வரும் அக்டோபர் 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நாடாளுமன்ற ஒழுங்குக் கமிட்டி சம்மன் அனுப்பி இருக்கிறது.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “நாடாளுமன்ற ஒழுங்கு கமிட்டி யாரையாவது அழைத்திருந்தால், அவர்கள் சென்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். அவர் தனது தவறுகளை ஏற்காவிட்டாலும், உண்மையை மறைக்க முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி விற்கப்பட்டார் என்பதை நாடு அறிய விரும்புகிறது. இது கவலைக்குரிய விஷயம். இது தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழல் விவகாரம். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்” என்றார்.

Tags: Anurag ThakurMahua moitra
ShareTweetSendShare
Previous Post

மோடிதான் மீண்டும் பிரதமராவார்: ராஜ்நாத் சிங் உறுதி!

Next Post

11 பதக்கங்களுடன் நிறைவடைந்த பாரா ஆசிய விளையாட்டு !

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies