பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு!
Jul 28, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசிலில் நேரிட்ட விமான விபத்தில், ஒரு குழந்தை உட்பட 14 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசில் நாட்டின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை, 2 பணியாளர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கியது. இவ்விமானம் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2-வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாநில ஆளுநர் வில்சன் லிமா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பார்சிலோஸில் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் இறந்ததற்கு நான் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான உதவிகளை வழங்குவதற்கு எங்கள் குழுக்கள் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வருகின்றன. அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபமும், பிரார்த்தனையும் உரித்தாகுக” என்று தெரிவித்திருக்கிறார்.

பிரேசிலிய விமானப்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விபத்து விசாரணை மற்றும் தடுப்பு மையத்தின் புலனாய்வாளர்கள் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து ஆளுநர் லிமா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “விமானத்தில் இருந்து உடல்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்டன. பலியானவர்கள் பிரேசில் சுற்றுலாப் பயணிகள். இப்பகுதி அதிக மழைப்பொழிவை எதிர்கொள்கிறது. தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட பிழையே விபத்துக்கான காரணம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: accidentBrazilAir craft14 dead
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை பட்டியல்

Next Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies