ஊட்டி மருத்துவ கல்லூரியில் குடிநீர் வழங்காத நிர்வாகம் - மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டி மருத்துவ கல்லூரியில் குடிநீர் வழங்காத நிர்வாகம் – மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 04:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊட்டி மருத்துவ கல்லூரியில் குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மத்திய பாஜக அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது.

இதை அடுத்து ஊட்டியில் அமைந்துள்ள நீலகிரி மருத்துவக் கல்லூரியில் 150- எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது. மூன்றாவது ஆண்டாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்தக் கல்லூரி சர்வதேச சுற்றுலா தலங்களில் முக்கிய இடமான ஊட்டியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு முக்கியத்துவம் பெற்ற கல்லூரி ஆக கருதப்படுகிறது.

குறிப்பாக இந்த கல்லூரிக்கு செல்ல போதுமான சாலை வசதிகள் கிடையாது. சுற்றுச்சுவர், சோதனைச் சாவடிகள், கேன்டியன், பாதுகாப்பு உட்பட அடிப்படை வசதிகள் இல்லை, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த நிலையில் பெருவாரியான நாட்கள் மின்சாரம் கிடையாது.

இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் மின்சார குறைபாடால் வெளி மாவட்டங்களிலிருந்து சேர்ந்த மாணவர்கள் வெந்நீர் குடிக்க முடியாமல், குளிர்ந்த நீரை குடித்து வருகின்றனர்.  இதனால் பல மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கல்லூரியில் மாணவர்கள் குளிக்க மற்றும் குடிக்க பயன்படுத்துகின்ற தண்ணீர் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று (29-ம் தேதி காலை முதல்) லாரி பழுதடைந்து விட்டதாக கூறி தண்ணீர் வழங்கவில்லை.

இதனால் மாணவர்களுக்கு குளிக்கவோ, குடிக்கவோ ஏன் கழிவறைகளுக்கு செல்ல கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விடுதிக்கு அருகாமையில் உள்ள நிர்வாக கட்டிடத்திற்கு சென்று பக்கெட்டுகளில் குறைந்த அளவே தண்ணீர் பிடித்து வருவதோடு, அந்தக் குளிர்ந்த தண்ணீரையே மாணவர்கள் அருந்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். மேலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விடுதிகளிலே தங்கியுள்ளனர்.

மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கல்லூரி நிர்வாகம், நீலகிரி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இத்தகவலை எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை தண்ணீருக்கான தீர்வு காணப்படவில்லை, இந்நிலையில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டு உள்ளது என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசும் சம்பந்தப்பட்ட துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: student protestOoty Medical College
Share
Tweet
SendShare
Previous Post

வீட்டின் சமையலறையில் இருந்த பாம்பு!

Next Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies