ஊட்டி மருத்துவ கல்லூரியில் குடிநீர் வழங்காத நிர்வாகம் - மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்!
Jul 28, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டி மருத்துவ கல்லூரியில் குடிநீர் வழங்காத நிர்வாகம் – மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டி மருத்துவ கல்லூரியில் குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மத்திய பாஜக அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது.

இதை அடுத்து ஊட்டியில் அமைந்துள்ள நீலகிரி மருத்துவக் கல்லூரியில் 150- எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது. மூன்றாவது ஆண்டாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்தக் கல்லூரி சர்வதேச சுற்றுலா தலங்களில் முக்கிய இடமான ஊட்டியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு முக்கியத்துவம் பெற்ற கல்லூரி ஆக கருதப்படுகிறது.

குறிப்பாக இந்த கல்லூரிக்கு செல்ல போதுமான சாலை வசதிகள் கிடையாது. சுற்றுச்சுவர், சோதனைச் சாவடிகள், கேன்டியன், பாதுகாப்பு உட்பட அடிப்படை வசதிகள் இல்லை, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த நிலையில் பெருவாரியான நாட்கள் மின்சாரம் கிடையாது.

இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் மின்சார குறைபாடால் வெளி மாவட்டங்களிலிருந்து சேர்ந்த மாணவர்கள் வெந்நீர் குடிக்க முடியாமல், குளிர்ந்த நீரை குடித்து வருகின்றனர்.  இதனால் பல மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கல்லூரியில் மாணவர்கள் குளிக்க மற்றும் குடிக்க பயன்படுத்துகின்ற தண்ணீர் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று (29-ம் தேதி காலை முதல்) லாரி பழுதடைந்து விட்டதாக கூறி தண்ணீர் வழங்கவில்லை.

இதனால் மாணவர்களுக்கு குளிக்கவோ, குடிக்கவோ ஏன் கழிவறைகளுக்கு செல்ல கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விடுதிக்கு அருகாமையில் உள்ள நிர்வாக கட்டிடத்திற்கு சென்று பக்கெட்டுகளில் குறைந்த அளவே தண்ணீர் பிடித்து வருவதோடு, அந்தக் குளிர்ந்த தண்ணீரையே மாணவர்கள் அருந்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். மேலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விடுதிகளிலே தங்கியுள்ளனர்.

மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கல்லூரி நிர்வாகம், நீலகிரி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இத்தகவலை எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை தண்ணீருக்கான தீர்வு காணப்படவில்லை, இந்நிலையில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டு உள்ளது என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசும் சம்பந்தப்பட்ட துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: student protestOoty Medical College
ShareTweetSendShare
Previous Post

வீட்டின் சமையலறையில் இருந்த பாம்பு!

Next Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies