ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!
Sep 13, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 09:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஞானவாபி மசூதி வழக்கில், அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரகாலம் அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியானது, 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் இந்து கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துக்கள் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை எதிர்த்து மசூதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்படவே, உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விடவே, மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 24-ம் தேதி தனது ஆய்வை இந்திய தொல்லியல் துறை தொடங்கியது.

இந்த ஆய்வறிக்கையை நவம்பர் 17-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டதால் நவம்பர் 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதன் பிறகும் தொல்லியல் துறை மீண்டும் 15 நாட்கள் அவகாசம் கோரியது.

ஆனால், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கிய நீதிமன்றம், குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நவம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. எனினும், அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு வாரகாலம் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை மீண்டும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அடுத்த விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags: courtGnanavabi MosqueArchaeological Survey
Share
Tweet
SendShare
Previous Post

சூப்பர் ஸ்டார் ரஜினி – பிறந்த நாள் சிறப்பு பார்வை!

Next Post

சீனாவில் குழந்தைகளிடம் சுவாச நோய்கள் அதிகரிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies