நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறை: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
Sep 18, 2025, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறை: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் இன்று அத்துமீறல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில், இன்று நடந்த கூட்டத்தொடரின்போது மக்களவை பார்வையாளர்கள் அரங்கில் இருந்த 2 பேர் அத்துமீறி எம்.பி.க்கள் பகுதிக்குள் குதித்தனர்.

மேலும், சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும், எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர். உடனே, தாங்கள் வைத்திருந்த புகைக் குண்டுகளை அரங்குக்குள் வீசினர். இதிலிருந்து மஞ்சள் கலரில் கிளம்பிய புகை, எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலூட்டியது.

பின்னர், பிடிபட்ட 2 பேரையும், அவைப் பாதுகாவலர்களிடம் எம்.பி.க்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் மக்களவைக்குள் நுழைந்தவர்களில் ஒருவர் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தவிர, நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த இருவரும் இதேபோல கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இனி நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலில் எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும்.

எம்.பி.க்களின் உதவியாளர்கள் யாரும் பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை. மேலும், விமான நிலையங்களின் நுழைவு வாயிலில் விமானப் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் ஸ்கேன் மிஷின் இருப்பதுபோல நாடாளுமன்ற நுழைவு வாயிலிலும் ஸ்கேன் மிஷின் பொருத்தப்படும்.

பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடித் தடுப்புகள் பொருத்தப்படும். நாடாளுமன்ற அலுவலர்கள், செய்தியாளர்கள் தனிப் பாதையில் வர வேண்டும். பார்வையாளர்கள் காலதாமத்துடன் வந்தால், அதற்கான தனிப் பாதை வழியாக வரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Tags: ParliamentSecurity
ShareTweetSendShare
Previous Post

ஜொலிக்கும் அயோத்தி விமான நிலையம்!

Next Post

இங்கிலாந்து ரயில் பணியாளர் விருதை வென்ற முதல் பிரிட்டிஷ் இந்தியர் !

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies