நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறை: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
May 10, 2026, 08:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறை: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் இன்று அத்துமீறல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில், இன்று நடந்த கூட்டத்தொடரின்போது மக்களவை பார்வையாளர்கள் அரங்கில் இருந்த 2 பேர் அத்துமீறி எம்.பி.க்கள் பகுதிக்குள் குதித்தனர்.

மேலும், சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும், எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர். உடனே, தாங்கள் வைத்திருந்த புகைக் குண்டுகளை அரங்குக்குள் வீசினர். இதிலிருந்து மஞ்சள் கலரில் கிளம்பிய புகை, எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலூட்டியது.

பின்னர், பிடிபட்ட 2 பேரையும், அவைப் பாதுகாவலர்களிடம் எம்.பி.க்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் மக்களவைக்குள் நுழைந்தவர்களில் ஒருவர் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தவிர, நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த இருவரும் இதேபோல கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இனி நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலில் எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும்.

எம்.பி.க்களின் உதவியாளர்கள் யாரும் பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை. மேலும், விமான நிலையங்களின் நுழைவு வாயிலில் விமானப் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் ஸ்கேன் மிஷின் இருப்பதுபோல நாடாளுமன்ற நுழைவு வாயிலிலும் ஸ்கேன் மிஷின் பொருத்தப்படும்.

பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடித் தடுப்புகள் பொருத்தப்படும். நாடாளுமன்ற அலுவலர்கள், செய்தியாளர்கள் தனிப் பாதையில் வர வேண்டும். பார்வையாளர்கள் காலதாமத்துடன் வந்தால், அதற்கான தனிப் பாதை வழியாக வரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Tags: ParliamentSecurity
ShareTweetSendShare
Previous Post

ஜொலிக்கும் அயோத்தி விமான நிலையம்!

Next Post

இங்கிலாந்து ரயில் பணியாளர் விருதை வென்ற முதல் பிரிட்டிஷ் இந்தியர் !

Related News

முதல்வராக பதவியேற்கும் விஜய் – உத்தேச அமைச்சரவை பட்டியல்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை – மு.க.ஸ்டாலின் வேதனை!

விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் – எஸ் ஏ. சந்திரசேகர்

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு – தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடிய தவெகவினர்!

தமிழக முதல்வர் பதவியேற்பு விழா – சென்னையில் 20 இடங்களில் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு!

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies