விமானத்தில் ஆள் கடத்தல்: குஜராத், பஞ்சாப் போலீஸார் விசாரணை!
Jul 28, 2026, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானத்தில் ஆள் கடத்தல்: குஜராத், பஞ்சாப் போலீஸார் விசாரணை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 28, 2023, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானத்தில் 300 பேரை நிகராகுவாவுக்கு கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் குஜராத் போலீஸார் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 சிறுவர்கள் உட்பட 303 பேருடன் கடந்த வாரம் நிகராகுவாவுக்குச் சென்று கொண்டிருந்தது. வழியில், இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸின் வாட்ரி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது, அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர். பின்னர், விமானத்தில் இருந்தவர்களை விமான நிலையத்தில் தங்க வைத்தனர்.

பின்னர், இது தொடர்பாக பயணிகளில் இருவரிடம் பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள் 4 நாட்களாக விசாரணை நடத்தினர். மேலும், பயணிகளிடம் நீதித்துறை விசாரணையும் நடைபெற்றது. அப்போது, பயணிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் பயணித்தது தெரியவந்தது.

எனவே, அந்த விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வாட்ரி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கடந்த 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது. ஆனால், 303 பயணிகளில் 276 பேர் மட்டுமே வந்தனர்.

5 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்ஸிலேயே தங்க அனுமதி கோரியதால், அங்கேயே தங்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, ஆட்களை கடத்தியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய 2 பேரும் பிரான்ஸிலேயே இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மேற்கண்ட விமானத்தில் இருந்த பயணிகளில் 3-ல் 2 பங்கு பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீதி 25% பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சியின் பின்னணியில் செயல்பட்ட நெட்வொர்க்கைக் கண்டறிய குஜராத் காவல்துறை குழுக்களை அமைத்தது.

குஜராத்தில் இருந்து வந்த பயணிகள் பனஸ்கந்தா, படான், மெஹ்சானா மற்றும் ஆனந்த் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மும்பையில் இருந்து பயணிகள் குஜராத்தைச் சென்றடைந்தவுடன், இதில் தொடர்புடைய முகவர்கள் குறித்து விசாரிக்க, அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று சி.ஐ.டி. (குற்றம்) காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் காரத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, பயணிகளின் விவரங்களை அறிந்த பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர், “மீண்டும் நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் 20-களின் நடுப்பகுதி அல்லது 30-களின் முற்பகுதியில் உள்ளவர்கள் . இவர்கள் செல்லுபடியாகும் நிகராகுவா விசாவைப் பெற்றவர்கள்” என்றார்.

Tags: punjapKidnappingpoliceflightGujrat
ShareTweetSendShare
Previous Post

ஓபன் ஏ.ஐ -க்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது!

Next Post

விஜயகாந்த் மறைவு! – பாஜக தலைவர்கள் இரங்கல்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies