இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!
Apr 29, 2026, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 16, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவிலுக்காக 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி, 30 ஆண்டுகாலம் மௌனவிரதம் இருந்து வருவது நம்மை வியக்க வைக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி தேவி. 1986-ம் ஆண்டு கணவனை இழந்த சரஸ்வதி தேவி, தனது வாழ்க்கையை ஸ்ரீராமருக்காக அர்பணித்து விட்டு, பல்வேறு கோவில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது, இராமரின் தீவிர பக்தையான சரஸ்வதி தேவி, அயோத்தி இராமஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்டப்படும்வரை மௌனவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, 2020-ம் ஆண்டு வரை தினமும் 23 மணி நேரம் மௌனவிரதம் இருந்து வந்திருக்கிறார். மதியம் 1 மணி நேரம் மட்டும் பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால், 2020-ல் இராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன் பிறகு, 24 மணி நேரமும் மௌனவிரதம் இருந்து வருகிறார். இன்றுவரை சைகை மொழியிலும், கடினமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதிக் காண்பித்தும் வருகிறார்.

மேலும், 2001-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்திரகூட்டில் 7 பாதங்களுக்கு தவத்தில் ஈடுபட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அயோத்திக்கு தனது பயணத்தைத் தொடங்கிய சரஸ்வதி தேவி, தற்போது இராமஜென்ம பூமியை வந்தடைந்திருக்கிறார். ஜனவரி 22-ம் தேதி இராமஜென்ம பூமியில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் சரஸ்வதி தேவி தனது மௌனவிரதத்தை முடித்துக் கொள்ளவிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சரஸ்வதி தேவி ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரங்கள் வரை தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், அதுவும் சைவ உணவுகள் மட்டுமே உண்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடவுள் மீது சிலர் இப்படியும் பக்தி கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Tags: JharkhandRam TempleAyodyaSaraswadhi devi
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிக்கட்டை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி!

Next Post

ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies