மத்திய, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம்: "உல்ஃபா" அதிகாரப்பூர்வமாக கலைப்பு!
Jul 28, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம்: “உல்ஃபா” அதிகாரப்பூர்வமாக கலைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய, மாநில அரசுகளுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 44 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘உல்ஃபா’ தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூா்வமாக கலைக்கப்பட்டு விட்டதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அனுப் சேட்டியா தெரிவித்திருக்கிறார்.

வட கிழக்கு மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ஆயுதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அஸ்ஸாம் மாநிலத்திலும் பல்வேறு ஆயுதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பயனாக பல ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.

அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உல்ஃபா தீவிரவாத அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பயனாக, டிசம்பா் 29-ம் தேதி உல்ஃபா அமைப்பு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அப்போது, ஒரு மாத காலத்துக்குள் அமைப்பை கலைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உல்ஃப் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் அனுப் சேட்டியா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அனுப் சேட்டியா கூறுகையில், “அஸ்ஸாம் மாநிலம் தர்ராங் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைப்பை கலைத்து விடவும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள பிற விதிகளைச் செயல்படுத்துவது தொடா்பாக 7 பேர் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட உள்ளேன். சமூக மற்றும் மொழி ரீதியிலான அடையாளத்தைப் பாதுகாக்க “அசோம் ஜாட்டியா பிகாஷ் மஞ்சா” என்ற புதிய சமூக கலாசார அமைப்பு தொடங்கப்படுகிறது. உல்ஃபா அமைப்பு கலைக்கப்பட்டது, முத்தரப்பு ஒப்பந்தம் செயல்படுத்துவது குறித்து மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மாவை சந்தித்து குழு உறுப்பினர்கள் தெரிவிப்பார்கள்” என்றார்.

Tags: AssamULFADissolved
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் விழா கொண்டாட்டம் – கல்வீச்சு, 144 தடையுத்தரவு!

Next Post

ஈரோடு – நெல்லை இரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்தார்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies