ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இங்கிலாந்து தாக்குதல்!
Jun 5, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இங்கிலாந்து தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து நேற்று இரவு இங்கிலாந்து விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை அழித்ததாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்க, அங்கு அமெரிக்கா போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்த கப்பல்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கண்டு கொள்ளாமல், கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தனர்.

இதை அடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படை ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதலில் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபட்டன.

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து நேற்று இரவு இங்கிலாந்து விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை அழித்ததாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது சமூக வலைத்தளங்களில் கூறியிருப்பதாவது, நேற்று இரவு, பிரிட்டன் விமானப்படை விமானங்கள், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை மேலும் சிதைத்தது. பிரிட்டன் மற்றும் சர்வதேச கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அப்பாவி உயிர்களைப் பாதுகாப்பதும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் நமது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

Tags: UK attack on Houthi rebels!
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Next Post

“விபாசனா என்பது சுய கண்காணிப்பின் மூலம் சுய மாற்றத்திற்கான பாதை ஆகும்! – பிரதமர் மோடி

Related News

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies