சீனாவில் இன்று 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கிங்ஹாய் (Qinghai) பகுதியில் இன்று 3.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 180 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கிங்ஹாய் (Qinghai) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.