மீண்டும் அழைத்தால் வர வேண்டும் : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் நீடித்த விசாரணை!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் அழைத்தால் வர வேண்டும் : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் நீடித்த விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஜரான இயக்குநர் அமீரிடம் திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் அமீர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

இந்தியாவில் இருந்து போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மேற்கு டெல்லி கைலாஷ் பார்க்கில் உள்ள கிடங்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுமார் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கும்பலின் தலைவனும், திமுக அயலக அணி முன்னாள்  நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி அவனை போலீசார் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியும்,  திரைப்பட இயக்குநருமான அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து இயக்குநர் அமீர் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 11மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

ஜாபர் சாதிக்குடன் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தொடர்பு, இறைவன் மிகப்பெரியவன் திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமீர் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் அமீர் சென்னை திரும்பியுள்ளார்.

Tags: delhiNCPenquiryDirector Ameer
ShareTweetSendShare
Previous Post

யானைகளின் வெப்பத்தை சமாளிக்க ஷவர் பாத்!

Next Post

மயிலாடுதுறையில் சிறுத்தை : மக்கள் பீதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies