மீண்டும் அழைத்தால் வர வேண்டும் : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் நீடித்த விசாரணை!
Jul 6, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீண்டும் அழைத்தால் வர வேண்டும் : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் நீடித்த விசாரணை!

Web Desk by Web Desk
Apr 3, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஜரான இயக்குநர் அமீரிடம் திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் அமீர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

இந்தியாவில் இருந்து போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மேற்கு டெல்லி கைலாஷ் பார்க்கில் உள்ள கிடங்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுமார் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கும்பலின் தலைவனும், திமுக அயலக அணி முன்னாள்  நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி அவனை போலீசார் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியும்,  திரைப்பட இயக்குநருமான அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து இயக்குநர் அமீர் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 11மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

ஜாபர் சாதிக்குடன் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தொடர்பு, இறைவன் மிகப்பெரியவன் திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமீர் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் அமீர் சென்னை திரும்பியுள்ளார்.

Tags: delhiNCPenquiryDirector Ameer
ShareTweetSendShare
Previous Post

யானைகளின் வெப்பத்தை சமாளிக்க ஷவர் பாத்!

Next Post

மயிலாடுதுறையில் சிறுத்தை : மக்கள் பீதி!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies