ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது - காரணம் என்ன ?
Sep 9, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது – காரணம் என்ன ?

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 03:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரின் சகோதரர் க்ருனால் பாண்டியா ஆகியோர், தனியாக தொழிலும் செய்து வருகிறார்கள். அந்த தொழலில், தற்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து “பாலிமர்” வியாபார நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் வைபவ் பாண்டியா.

இதில், ஹர்திக் பாண்டியா 40 %முதலீடும், க்ருனால் பாண்டியா 40 %முதலீடும் செய்துள்ளனர். மேலும், இவர்களின் சித்தி பையன் வைபவ் பாண்டியாவும் 20 %முதலீடு செய்துள்ளார்.

ஹர்திக்கும், க்ருனாலும் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடி வருவதால், இந்த நிறுவனத்தை வைபவ் பாண்டியா, பொறுப்பு ஏற்று கவனித்து வருகிறார்.

இந்நிலையில், வைபவ் பாண்டியா 4.30 கோடியை கையாடல் செய்துவிட்டதாக ஹர்திக், க்ருனால் இருவரும் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஹர்திக்கும், க்ருனாலும் புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்ட நிலையில், இவர்களின் பெரியப்பா பையனான வைபவ் பாண்டியாவை, தற்போது மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பணத்தை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல், நிறுவனத்தின் ரகசிய திட்டங்களை தெரிந்துகொண்டு, கையாடல் செய்த பணத்தில் இதேபோல் மற்றொரு நிறுவனத்தை துவங்கி, முன்பு துவங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை முழுவதுமாக ஈர்த்து, பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், தனது 20 சதவீத லாபத்தை 33 சதவீதமாக மாற்றி இருக்கிறார். மேலும் அவர்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வலம் வந்த பெரியப்பா மகன் வைபவ் பாண்டியாவால் குடும்பம் இரண்டாகி உள்ளது. ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பல அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா, குடும்பத்திலும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.

Tags: Hardik Pandya's Brother Vaibhav Pandya Arrested - Why?
Share
Tweet
SendShare
Previous Post

2-வது பதவி காலத்தின் முடிவிலும் பாஜக அரசுக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரிப்பு : பிரதமர் மோடி பேட்டி!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies