ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது - காரணம் என்ன ?
Jul 26, 2026, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது – காரணம் என்ன ?

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரின் சகோதரர் க்ருனால் பாண்டியா ஆகியோர், தனியாக தொழிலும் செய்து வருகிறார்கள். அந்த தொழலில், தற்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து “பாலிமர்” வியாபார நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் வைபவ் பாண்டியா.

இதில், ஹர்திக் பாண்டியா 40 %முதலீடும், க்ருனால் பாண்டியா 40 %முதலீடும் செய்துள்ளனர். மேலும், இவர்களின் சித்தி பையன் வைபவ் பாண்டியாவும் 20 %முதலீடு செய்துள்ளார்.

ஹர்திக்கும், க்ருனாலும் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடி வருவதால், இந்த நிறுவனத்தை வைபவ் பாண்டியா, பொறுப்பு ஏற்று கவனித்து வருகிறார்.

இந்நிலையில், வைபவ் பாண்டியா 4.30 கோடியை கையாடல் செய்துவிட்டதாக ஹர்திக், க்ருனால் இருவரும் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஹர்திக்கும், க்ருனாலும் புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்ட நிலையில், இவர்களின் பெரியப்பா பையனான வைபவ் பாண்டியாவை, தற்போது மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பணத்தை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல், நிறுவனத்தின் ரகசிய திட்டங்களை தெரிந்துகொண்டு, கையாடல் செய்த பணத்தில் இதேபோல் மற்றொரு நிறுவனத்தை துவங்கி, முன்பு துவங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை முழுவதுமாக ஈர்த்து, பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், தனது 20 சதவீத லாபத்தை 33 சதவீதமாக மாற்றி இருக்கிறார். மேலும் அவர்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வலம் வந்த பெரியப்பா மகன் வைபவ் பாண்டியாவால் குடும்பம் இரண்டாகி உள்ளது. ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பல அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா, குடும்பத்திலும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.

Tags: Hardik Pandya's Brother Vaibhav Pandya Arrested - Why?
ShareTweetSendShare
Previous Post

2-வது பதவி காலத்தின் முடிவிலும் பாஜக அரசுக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரிப்பு : பிரதமர் மோடி பேட்டி!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies