காலிஸ்தான் ஆதரவு நிகழ்ச்சியில் கனடா பிரதமர்!
Jun 13, 2026, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலிஸ்தான் ஆதரவு நிகழ்ச்சியில் கனடா பிரதமர்!

Murugesan M by Murugesan M
May 2, 2024, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டொராண்டோவில் பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள்’ எழுப்பப்பட்டது தொடர்பாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . இதையடுத்து, இந்தியாவுக்கான கனடா நாட்டு துணை தூதரை நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.

அண்மையில் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் நடைபெற்ற சீக்கியர் தின விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் பிரிவினை வாதத்தை , தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான பதாகைகள் ஏந்திய படி பலர் கலந்து கொண்டனர்.

‘ நிஜ்ஜாரைக் கொன்ற கொலையாளிகள்’ என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் படங்களையம் தூக்கிப் பிடித்தபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான Sikhs for Justice என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த Sikhs for Justice அமைப்பினர் தான், கடந்த ஆண்டு கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவகத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் இந்திய தூதரக அதிகாரிகளை கடுமையாக தாக்கினார்கள்.

கல்சா தினம் எனப்படும் இந்த சீக்கிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் வாழும் சீக்கியர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க துணைநிற்பதாக உறுதி அளித்தார்.

நிஜ்ஜாரைக் கொன்றது இந்தியாவின் உளவுத்துறை தான் என்ற உண்மையை கனடா புலனாய்வு துறை தான் வெளிக்கொண்டு வந்தது என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

மீண்டும் ஒரு முறை நேரடியாக பிரதமர் மோடியைக் குற்றம் சாட்டிய அவர், நிஜ்ஜாரின் கொலையின் பின்னணியில் இந்தியா என்பதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதே மேடையில் , காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதர் சஞ்சய் வர்மாவை தண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.

இது மட்டுமின்றி காலிஸ்தான் தனிநாடு தொடர்பான மூன்றாம் கட்ட பொது வாக்கெடுப்பு வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதிகள் கூட்டிய ஒரு பொது நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டிருப்பதோடு , அதில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் கோஷங்கள் எழுப்பப் பட்டிருப்பதை, இந்தியா உடனடியாக கண்டித்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா நாட்டு துணை தூதரை நேரில் வரவழைத்து அழைத்து கண்டித்துள்ளது. இதுதொடர்பாக தனது கவலையைத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் வெளிப்பாடுகள். இரு நாட்டு உறவுகளை பாதிக்கும், மேலும் இந்த மாதிரியான செயல்கள், கனடாவிலும் வன்முறை சூழலை உண்டாக்கும் ” என்று குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாதிகளை ஒடுக்க ட்ரூடோ அரசு தவறிவிட்டது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டு உண்மைதான் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சூழலில் இந்தியா -கனடா உறவின் எதிர்காலம் என்ன? இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு திரும்புமா என்ற கேள்விக்கு பதில் கனடா அரசின் நடவடிக்கைகளில்தான் இருக்கிறது.

Tags: Canadian Prime Minister at Khalistan support program!
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தின்போது மயங்கி விழுந்த மூதாட்டியால் பரபரப்பு!

Next Post

தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த காட்டு யானைகள்!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies