மத சுதந்திர அறிக்கை அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!
Jun 22, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத சுதந்திர அறிக்கை அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

Murugesan M by Murugesan M
Jun 29, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்காவால் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களை இந்தியா கடுமையாக மறுத்திருக்கிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த வாரம் வெளியிட்டது.

அந்த அறிக்கையில், இந்தியாவில், சிறுபான்மையினர்,குறிப்பாக இஸ்லாமியர் மற்றும் கிருத்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், அவர்களின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட விரும்பாத தகாத சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையை வெளியிட்டு பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர், ஆண்டனி பிளிங்கன், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வந்த பிறகு, இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதைக் கவனமுடன் கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக பதில் கூறவில்லை என்றாலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வழக்கத்துக்கு மாறான கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த காலத்தைப் போலவே, அமெரிக்காவின் இந்த ஆய்வறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளது என்றும், இந்தியாவுக்கு எதிராக முன் தீர்மானத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் சமூகக் கட்டமைப்பைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் உருவாக்கப்பட்ட இந்த அறிக்கை, இந்தியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வாக்கு வங்கி அரசியல் கண்ணோட்டத்துடன் உள்ளது என்றும், ஒரு சார்புடையவர்களின் பரிந்துரையின் பேரில் தயாரிக்க பட்ட இந்த அறிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் அனைவரும் பயன்பெறவே மத்திய அரசின் நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்றும் , அரசின் திட்டங்களில் மத்திய அரசு பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி வகுப்பெடுக்கும் அமெரிக்காவில் தான் அதிகம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளன என்றும் நாளுக்கு நாள் அமெரிக்காவில் குற்ற எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்றும், விமர்சித்துள்ளளார்.

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான தனிமனித தாக்குதல்கள், கொலைகள், மனித உரிமை மீறல்கள் பற்றிய விவரங்கள் இந்தியாவிடம் உள்ளது என்று தெரிவித்த ரந்தீர் ஜெய்ஸ்வால்,மத ரீதியிலான வன்முறை அமெரிக்காவில் தான் அதிகரித்து வருகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப் படும் பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சட்டங்களைக், கேள்விக்குள்ளாக்கும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை என்று ரந்தீர் ஜெய்ஸ்வால், கடுமையாக பதிலளித்துளளார்.

மொத்த அறிக்கையில், சுமார் 60 பக்கங்களில், இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்பதாக போலி தோற்றத்தை உருவாக்கிய அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.

Tags: India's reply to America's statement on religious freedom!
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலை வெடி விபத்து! – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எல். முருகன் இரங்கல்!

Next Post

BOXING பாகுபலி மைக் டைசன்!

Related News

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies